மத்தியஸ்தர்கள் தயவின்றி ஈரானுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவுடனான நேரடி பேச்சுவார்த்தை அர்த்தமற்றது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசு அணு ஆயுயுதங்களை தயாரிக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டும் டிரம்ப், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வராவிட்டால் குண்டு வீசப்போவதாக முன்னர் மிரட்டல் விடுத்திருந்தார். போருக்குத் தயாராக உள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.