அரியாலையில் 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

You are currently viewing அரியாலையில் 42 மில்லியன் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை சிறீலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் சிறீலங்கா பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்களிடம் இருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments