அளவெட்டியில் மனைவியின் கையை வெட்டித் துண்டித்த கணவன்!

You are currently viewing அளவெட்டியில் மனைவியின் கையை வெட்டித் துண்டித்த கணவன்!

தகாத உறவில் ஈடுபட்ட தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை  சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர். சிறீலங்கா காவற்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான கணவன் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான கணவரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் சந்தேக நபரான கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று சந்தேக நபரின் மனைவி வீட்டின் அறைக்குள் இருந்து இரகசியமாக தனது கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ள நிலையில் அதனை அவதானித்த கணவன் தனது மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

காயமடைந்த 41 வயதுடைய மனைவி தெலிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments