ஆப்பிரிக்க நாட்டில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் !

You are currently viewing ஆப்பிரிக்க நாட்டில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் நீண்ட காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ருவாண்டா சுமார் 4 ஆயிரம் வீரர்களை அனுப்பி உதவி புரிந்து வருகிறது. எனவே ருவாண்டா உதவியுடன் அங்குள்ள கோமா நகரத்தை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த உள்நாட்டுப்போரில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த 3-ந் தேதி மனிதாபிமான அடிப்படையில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனால் அதற்குள் கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசின் புகாவுக்கு அருகே மற்றொரு நகரத்தையும் கைப்பற்றி இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் உள்நாட்டு போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply