இதுவரை 18 மண்டையோட்டுத்தொகுதிகள் கண்டுபிடிப்பு!!

You are currently viewing இதுவரை 18 மண்டையோட்டுத்தொகுதிகள் கண்டுபிடிப்பு!!

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று நான்காம் நாளாகத் தொடர்ந்தன. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஆனந்தராசாவின் கண்காணிப்பின் கீழ் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்றைய அகழ்வில் ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன. இந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் திறந்த வெளி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply