நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ உலங்கு வானூர்தி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காட்டேரி மலைப்பாதையில் சென்ற போது கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியில் முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்து உள்ளனர்.
அடர்ந்த மேகமூட்டம் காரணமாக வழி தவறி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நேரிட்ட காட்டுப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்து.
