இந்தியாவில் நேற்று ஒருநாளில் 117,100 பேருக்கு கொரோனா!

You are currently viewing இந்தியாவில் நேற்று ஒருநாளில் 117,100 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் இன்று காலை 9 மணி வரையான கடந்த 24 மணி நேரங்களில் 117,100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், நேற்று 302 பேர் உயிரிழந்தனர் என இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்ட தொற்று நோய் நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று 90,928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று நோயாளர் தொகை ஒரு இலட்சத்தைக் கடந்து அதிகரித்துள்ளது.

இன்று வரையான தரவுகளின்படி இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 35,226,386 ஆக அதிகரித்துள்ளது. மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483,178 ஆக பதிவாகியுள்ளது.

தொற்று நோயுடன் தற்போது மருத்துவமனைகளில் 3,71,363-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இந்தியாவின் கொரோனா தொற்று வீதம் தற்போது 7.74 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments