இரசியாவின் தாக்குதலால் தடுமாறும் உலகநாடுகள்!

You are currently viewing இரசியாவின் தாக்குதலால் தடுமாறும் உலகநாடுகள்!

உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பழைமையான தேவாலயம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 போ் காயமடைந்துள்ளனர்.

நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் ஏவுகணை தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது.

தேவாலயத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை பணியாளர்கள் மீட்டு வெளியே எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது தேவாலயத்தின் உள்ளே இருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒடேசா நகரத்தின் மீதான தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு கூலிப்படையினர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மற்றும் தரையிலிருந்து இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments