இரசிய புலனாய்வுக் கட்டமைப்பு மேற்கொண்ட பாணியில் தமிழர்கள் சந்திக்கும் உளவியல் போர்!

You are currently viewing இரசிய புலனாய்வுக் கட்டமைப்பு மேற்கொண்ட பாணியில் தமிழர்கள் சந்திக்கும் உளவியல் போர்!

இரசிய புலனாய்வுக் கட்டமைப்பான GPU மேற்கொண்ட operation trust பாணியில் தமிழர்கள் நாம் தற்போது சந்திக்கும் புலனாய்வு உளவியல் போர் அமைந்துள்ளது.    

 

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகள் மறைந்தோடி விட்டது. இன்றைய நிலையில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின், தொடர்சியான நிலைப்பின் இறுதிப் பக்கபலமாக எண்ணி , புலம்பெயர் தேசத்தையும் அது சார்ந்த கட்டமைப்புக்களையும் இந்திய,சிறிலங்காவின் உளவு அமைப்புகள் இலக்கு வைத்திருக்கின்றன. இந்த நடவடிக்கையை  உலகப் புலனாய்வு வரலாற்றின் படிப்பினைகளோடு ஆராய்ந்து பார்க்கும் போது,

ரசியாவின் புலனாய்வு அமைப்புக்களில் ஒன்றான GPU, அதாவது நவீன KGB உளவு அமைப்பின் தந்தையாக கருதப்படும் GPU அமைப்பு ஒப்பரேசன் ரஸ்ட் (Operation Trust) என்ற ஒரு உளவு நடவடிக்கையை ஆரம்பிக்கிறது. ரசியாவிற்குள் இருக்கும் ஒரு புரட்சிக் கட்டமைப்பான MUCR (Monarchist Union of Central Russia) என்ற அமைப்பின் மீதே இந்த நடவடிக்கையை அந்த உளவு அமைப்பு நடத்துகிறது.

மிக இலகுவாக அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்து வேலையை முடித்துவிடுகிறது GPU ஆனால் இதற்கு பின் தான் அவர்களின் பெரும் சூழ்ச்சியே ஆரம்பிக்கிறது. ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட MUCR அமைப்பு முழுதாக அழிந்தது GPU வை தவிர வேறு எவருக்கும் தெரியாது. இப்படி இருக்க ரசியாவின் உளவு அமைப்பு ஒரு சிலரை தானே தயார்ப்படுத்தி ,அவர்கள் MUCR இயக்கத்தை இயக்குவதைப் போல நடிப்பதற்கு தயாராகிறது. அவர்களுக்கு கிடைத்தவரைக்கும் இலாபம் என “புரட்சி ஓங்கும், போல்ஸ்விக் அரசு ஒழிக” என சொல்லிக்கொண்டு தங்கள் உளவு வேலையை ஆரம்பித்தார்கள்.

MUCR இயக்கத்தை நடத்துவது போல நாடகமாடி அதனுடன் நேரடியாகவோ மறைமுகமாவோ தொடர்புகொள்ளும் நபர்களையும், மற்றும் பிற இயங்கங்கள் அனைத்தையும் வளைத்து போடும் வேலையை இலாவகமாக ஆரம்பித்தார்கள்.

இவர்களின் மிக முக்கிய இலக்காக இருந்தது ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கிவந்த போராளிகளே. ஆகவே MUCR இன் ஐரோப்பிய பிரிவு என்கின்ற பெயரில் GPU வின் உறுப்பினர்கள் செயற்பட ஆரம்பித்து அந்த காலப்பகுதியில் மிக எழுச்சியாக செயற்பட்டுக்கொண்டிருந்த சிட்னி என்கிற போராளியை  அணுகி ரசியாவில் கிளர்ச்சி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் ஆயுத கிளர்ச்சி ஒன்றை செய்து ரசியாவின் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என சொல்லி அவனை மூளைச் சலவை செய்து ரசியாவிற்குள் அழைத்து வந்து ஒட்டுமொத்த ரசியாவிற்கும் எதிரான  உண்மையான,ஐரோப்பிய கிளர்ச்சியாளர்களை கைது செய்ததுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த ஒப்பரேசன் trust

இன்று இதே பாணியில் இந்த மாதிரியையே பிரதி செய்து தமிழர்களுடைய புலம்பெயர்கட்டமைப்புக்களின் மீது ஒரு ஒப்பரேசனை ஏவி இருக்கிறது சிறிலங்காவின் நலன் பேணும்  பிராந்திய, உளவு அமைப்பு. சனநாயக ரீதியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான அனைத்து கதவுகளையும் திறந்து புலம்பெயர் தேசகட்டமைப்புக்கள் அவர்களுக்கான களத்தில் சமரசமின்றி தமிழீழத்துக்கான தமது போராட்டத்தை நடத்திவருகின்ற இந்த வேளையில் இந்த உளவு அமைப்பின் இலக்காக தமிழ்த்தேசிய புலம்பெயர் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக தமிழர்கள் தங்களின் கைப்பொம்மைகளாக இருக்கவேண்டும் என்ற நோக்குடன் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியே பழக்கப்பட்ட பிராந்திய மேலாதிக்கம், இன்று தனது புலனாய்வு அமைப்புக்களோடு தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் போலியான அறிக்கைகளை வெளியிட்டபடி புலம்பெயர் சமூக கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவதற்கு மிகத்தீவிரமாக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தந்திரமான புலனாய்வு உத்தியாகும். தமிழீழத்தை நோக்கி தொடர்ந்தும் போராடும் அனைத்துலகக் கட்டமைப்புகளைக் கைப்பற்றுதல் அல்லது அழித்தல் என்பதுதான் இந்த model operation trust இன் நோக்கம் . இந்தவகை நடவடிக்கைகள் 2023 இல், ஜேர்மனியிலும். பிரித்தானியாவிலும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நாடுகளிலிருந்த செயற்பாட்டாளர்களிதும்,மக்களினதும், தெளிவான சிந்தனையும், தலைவரின் சிந்தனையின் மேல் அவர்கள் வைத்திருந்த  அளவற்ற நம்பிக்கையும், துணிவும் இந்த சதிமுயற்சியை முறியடித்து படுதோல்வியடையச் செய்தது. ஜேர்மனியிலும், பிரித்தானியாவிலும் மரண அடிவாங்கிய சதிகாரர்கள் 2024 இல் சுவிட்சர்லாந்தில் கடைவிரித்தனர். கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறி தமிழ்த்தேசியக் கட்டமைப்புகளினுள் ஊடுருவித் தங்கள் கைவரிசையை காட்டத் தொடங்கினர். கொதித்தெழுந்த செயற்பாட்டாளர்களும், மக்களும் தக்கபாடம் புகட்டத் தயாராகினர். விளைவு மைதானத்திலிருந்து ஓட ஓட விரட்டியுள்ளனர்.

ஏற்கனவே களத்தில் வீரியமாக இயங்கி வருகின்ற தேசியத்தலைவரின் சிந்தனையை விட்டகலாத அனைத்துலகத்தொடர்பக கட்டமைப்புக்களை சிதைப்பதுடன்

தம்மை அந்த இடத்தில் நிறுவி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் செல் நெறியை சிதைப்பதையே முக்கிய இலக்காக கொண்டு , இந்த உளவு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது .  இந்த உளவு நடவடிக்கையை உடைத்தெறியும் உளவுறனையும் இதையும் தாண்டி சமரசமற்று தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தொடர்ந்தும் பயணிக்கும்  சக்தியும்,கடப்பாடும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு இருக்கின்றது என்பதை துரோகிகளின் முகத்தில் அறைந்து சொல்ல வேண்டிய காலம் இது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எத்தகைய இடர்கள் வரினும் தேசியத்தலைவரின் சிந்தனை வழிகாட்டலில், எமது மூலோபாயம் சிதையாமல் இலக்கை அடைவோம்.  தமிழீழ விடுதலைப்புலிகளின் படைய மேம்பாடு அல்லது  மீளுருவாக்கம்  என்பது காலத்தின் கட்டாயம், எங்கு எந்த இடத்தில் ஆயுதங்கள்  மௌனிக்கப்பட்டதோ அங்குதான் அந்த மௌனிப்பு கலையும்.  தேசியத்தலைவரின் சிந்தனையின் அடிப்படையில் தன்னெழுச்சியாக அது நிகழக்கூடிய சாத்தியங்கள் மிகவும் அதிகம்.கடந்த 2023 ம் ஆண்டு மாவீரர்நாளில், களத்திலும் புலத்திலும் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள் திரட்சி இதனையே கட்டியம் கூறி நிற்கிறது. 15 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட இப்பேரெழுச்சியை சிங்களப்பேரினவாதமோ , பிராந்திய வல்லரசோ மேற்குலகமோ கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கடந்த காலங்களில் நாங்கள் கூறியது போல one man Army ஆக மேதகு பிரபாகரன் சிந்தனை அதனை செய்து காட்டியுள்ளது.

ஆகவே தன்னெழுச்சியாக வீரியமாக,  தேசியத்தலைவரின் சிந்தனையை அகச்சிந்தையில் கொண்ட வீரர்களினால்  ஒரு மீளுருவாக்கம் அல்லது படைய மேம்பாடு நடந்து விடுமோ என சிங்களமும் பிராந்தியமும் அஞ்சி நடுங்குகிறது. இதனைத்தடுக்க பலவிதமான இத்துப்போன புலனாய்வு உத்திகளைக் கையாள்கின்றன. அத்தகைய நடவடிக்கைகளை பிரித்தானியா, சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் முடுக்கிவிட முயற்சிக்கின்றன. ஒருகாலத்தில் எதிரி என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிப்பவராக எமது தேசியத்தலைவரே இருந்தார் . தற்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை எதிரி தீர்மானிக்கத் தொடங்கிவிட்டான். இது மிகவும் ஆபத்தானது . புலம்பெயர் தேச தேசியக்கட்டமைப்புகளில் அகமுரண்பாடுகளையும், உடைவுகளையும் ஏற்படுத்தி இந்த பலமான தமிழ்த்தேசிய வலுவை செயலிழக்க வைக்கவேண்டும் என எதிரிகள் இப்போது தீர்மானித்துள்ளனர். எனவே விழிப்பு, விவேகம், துணிவு இவற்றின் துணையோடு தேசியத்தலைவரின் வழித்தடத்தில் நடப்பதற்கு  நாங்கள் என்றும் தயார்நிலையில் இருக்கிறோம் என உறுதியெடுத்துக்கொள்வோமாக….. ஏன்,எதற்கு,எப்படி என புலிகள் வழியில் சிந்தனை செய்யுங்கள் விடைகிடைக்கும். வழிபிறக்கும். ஜேர்மனி, பிரித்தானிய செயற்பாட்டாளர்கள், மக்களின் வழியில், சதிகாரர்களிற்கு சுவிசிலும் மரண அடி விழத்தொடங்கி விட்டது. மேதகு பிரபாகரன் சிந்தனை நின்று வழிகாட்டும் .

-அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments