வவுனியாவில் இ.போ.ச.பேருந்து மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து,வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் நேற்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவார்.
இன்னொருவர்
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் கொடிகாமம் பகுதியில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட வயோதிபரொருவரை மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கொடிகாமத்தைச் சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தபால் ரயில் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு செல்வதற்காக தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.