இராசேந்திரகுளம் கிராமத்தில் இளம் பெண் சடலமாக மீட்பு !

You are currently viewing இராசேந்திரகுளம் கிராமத்தில் இளம் பெண் சடலமாக மீட்பு !

வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில்  இளம்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில்   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

24வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

குறித்த பெண் நீண்ட நேரமாக அவரது வீட்டு அறையில் அமைதியாக இருந்தமையினையடுத்து வீட்டார் அறையின் கதவினை திறந்து பார்த்த சமயத்தில் வீட்டின் கூரையின் மேற்பகுதியில் துணியின் மூலம் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நெளுக்குளம் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply