இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு!

You are currently viewing இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு!

மன்னார்- முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு குடும்பஸ்தர்களின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (24.08.2023) இடம்பெற்ற நிலையில்இ சடலங்கள் இன்று (26.08.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஜேசுதாசன் அருந்தவராஜா என்ற 3 பிள்ளைகளின் தந்தை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த 56 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை கணபதி காளிமுத்து ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் சிறீலங்கா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments