இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்..” – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

You are currently viewing இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்..” – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாவும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த சூழ்நிலையில் இஸ்ரேல் மீது இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

காசா முனையில் இருந்து ஹமாஸ் ராணுவ பிரிவான குவாசம் பிரிகேட் இந்த ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகள் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இலக்கை அடைந்த பிறகே இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம்” என்று நெதன்யாகு கூறினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments