இலங்கையில் தொடரும் கொரோனா பலியெடுப்பு: 15 நாட்களில் 582 பேர் உயிரிழப்பு!

You are currently viewing இலங்கையில் தொடரும் கொரோனா பலியெடுப்பு: 15 நாட்களில் 582 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 582 கொவிட்-19 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டு வரும் நாளாந்த அறிக்கைகளின் அடிப்படையில் இவ்விடயம் தொகுக்கப்பட்டுள்ளது.

ஜூலை-01 தொடக்கம் 15 ஆம் திகதி வரையான 15 நாட்களில் இவ்வாறு 582 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஜூலை-01 – 37 மரணங்கள்

ஜூலை-02 – 34 மரணங்கள்

ஜூலை-03 – 45 மரணங்கள்

ஜூலை-04 – 32 மரணங்கள்

ஜூலை-05 – 45 மரணங்கள்

ஜூலை-06 – 38 மரணங்கள்

ஜூலை-07 – 40 மரணங்கள்

ஜூலை-08 – 43 மரணங்கள்

ஜூலை-09 – 33 மரணங்கள்

ஜூலை-10 – 35 மரணங்கள்

ஜூலை-11 – 31 மரணங்கள்

ஜூலை-12 – 41 மரணங்கள்

ஜூலை-13 – 37 மரணங்கள்

ஜூலை-14 – 50 மரணங்கள்

ஜூலை-15 – 41 மரணங்கள்

இவ்வாறு கடந்த 15 நாட்களில் 582 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் ஜூலை-15 வரையான நாட்களில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3702 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments