கொரோனா வைரஸ் தொற்றால் மற்றுமொருவர் உயிரழந்துள்ளதையடுத்து இலங்கையில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே மூவர் அபாயகரமாக கட்டத்தில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 11வது கொரோனா மரணம்!
