இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அந்தரிப்பு!

You are currently viewing இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அந்தரிப்பு!

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள், சாலைக்கு முன்பாக  இன்று(13)   போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை  வலியுறுத்தியும்,

ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும்  குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி  இந்த கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த  செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு, கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை  ஊழியர்களுக்கும், தனியார் பேரூந்து ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து.

இதன்போது இரு தரப்பினர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர்.

இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பேரூந்துகளும், வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போராட்ட இடத்தில் கல்முனை தலைமையக பொலிஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments