ஈரான்(iran) 1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
தெஹ்ரானில் சமீபத்தில் புதிய ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மசூத் பெசேகியன் தலைமையில் நடைபெற்றதாக செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.
புதிய பாலிஸ்டிக் ஏவுகணை குறித்து தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்பு திறன்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட 16 மீட்டர் நீளமுள்ள புதிய ஏவுகணை, எந்த நாடும் ஈரானை தாக்காது என்பதை உறுதி செய்கிறது என்று கூறினார்.
ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இஸ்ரேலை(israel) நேரடியாகத் தாக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.