ஊசிக்குப் பயந்து வைத்தியசாலையை விட்டு ஓடியவர் வாகனம் மோதிப் பலி!

You are currently viewing ஊசிக்குப் பயந்து வைத்தியசாலையை விட்டு ஓடியவர் வாகனம் மோதிப் பலி!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் சனிக்கிழமை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையிலிருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு செவன்ற பொலிசார் அச் சடலத்தை மீட்டனர். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தர்.

வீதியால் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தும் வவுனியா பொலிசார் மற்றும் போக்குவரத்து சிறீலங்கா காவற்துறையினர் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments