ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை விசாரணைக்கு அழைத்த சிங்கள காவற்துறை!

You are currently viewing ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை விசாரணைக்கு அழைத்த சிங்கள காவற்துறை!

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை மாங்குளம் உதவிப்  பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு மாங்குளம் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (08) ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத நிலையில்  அவருக்கான அழைப்பு கடிதத்தினை குடும்பத்தாரிடம்  வழங்கி சென்றுள்ளனர்.

எந்தவித காரணங்களும் குறிப்பிடாது உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் விசாரணைக்காக வாக்குமூலம் பதிவுசெய்ய இருப்பதனால் 2024.08.09 ம் திகதி காலை 9 மணிக்கு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை விசாரணைக்கு அழைத்த சிங்கள காவற்துறை! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments