எரிகாயங்களுக்குள்ளான 19 வயது கர்ப்பிணிப் பெண் மரணம்! – கணவனை கைது செய்ய உத்தரவு!

You are currently viewing எரிகாயங்களுக்குள்ளான 19 வயது கர்ப்பிணிப் பெண் மரணம்! – கணவனை கைது செய்ய உத்தரவு!

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாத கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கணவனைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் கணவனைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், காவல்த்துறைக்கு பணித்தார்.

உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துஜன் ரிசிக்கா (வயது-19) என்ற பெண்ணே உயிரிழந்தார். திருமணமாகி ஒரு வருடமாகியுள்ள நிலையில், 8 மாத கர்ப்பிணியான குறித்த பெண் கடந்த 17ஆம் திகதி உடலில் மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டப்பட்ட காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 6 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். அவரது உடலில் தீ காயங்கள் ஏற்பட்டமையில் சந்தேகம் இருப்பதாகவும் கணவனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் காவல்த்துறைக்கு பணித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments