எரிபொருள் ஏற்றிச்சென்ற பாரவூர்தி மீது மற்றொரு பாரவூர்தி மோதி கோர விபத்து – 48 பேர் பலி!

You are currently viewing எரிபொருள் ஏற்றிச்சென்ற பாரவூர்தி மீது மற்றொரு பாரவூர்தி மோதி கோர விபத்து – 48 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு பாரவூர்தி சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு பாரவூர்தி எரிபொருள் ஏற்றிச்சென்ற பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments