கனடா- ஒன்ராறியோவில் நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, நேற்று ஒன்ராறியோவில், கொரோனா தொற்றுக்குள்ளாகிய 375 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,630 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை தொற்றுக்குள்ளாகிய 462 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று 375 பேர் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை மருத்துவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.