ஒரே நாளில் இரண்டு பொறியியல் மாணவர்களை இழந்த யாழ்ப்பாணம்!

You are currently viewing ஒரே நாளில் இரண்டு பொறியியல் மாணவர்களை இழந்த யாழ்ப்பாணம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் நேற்றுக் காலை பல்கலைக்கழகத்துக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும், யாழ்ப்பாணம் அல்வாய் மாலுசந்தியை சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனை காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயை இழந்த குறித்த மாணவன் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று கூறப்படுகிறது.

அதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவரின் சடலம், விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை – நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தினக்குரல் நாளிதழ பிரதம ஆசிரியர் ஹரனின் சகோதரரின் மகனாவார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொறியியல் பீட மாணவர்கள் இருவர் ஒரே நாளில் உயிரை மாய்த்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments