ஒற்றுமை இல்லாவிட்டால் நாங்கள் பேரம் பேசும் சக்தியை இழக்கநேரிடும்!!

You are currently viewing ஒற்றுமை இல்லாவிட்டால் நாங்கள் பேரம் பேசும் சக்தியை இழக்கநேரிடும்!!

ஒற்றுமை இல்லாவிட்டால் நாங்கள் பேரம் பேசும் சக்தியை இழக்கநேரிடும்!! 1

அதிகார பகிர்வு குறித்த யோசனை முன்வைக்கபடாத பட்சத்தில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும்  புதிய  அரசியல் அமைப்பிற்கு செல்வது ஆபத்தானது என தெரிவித்துள்ள பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் நாங்கள் ஒற்றுமைபடவேண்டும் , ஒற்றுமை இல்லாவிட்டால் வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் பலம் பெறும் நிலை ஏற்படும், தமிழ்தேசிய கட்சிகள் செல்வாக்கு இழக்கும் நிலை உருவாகும்,நாங்கள் பேரம்பேசும் சக்தியை இழக்கவேண்டிய நிலையேற்படும்என எச்சரித்துள்ளார்.

டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய  அரசியல் அதிகார வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியவேளை இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

அரசமைப்பு மாற்றம் வேண்டுமா என்றால் புதிய அரசமைப்பு வேண்டுமா என்றால் வேண்டாம் என்றே சொல்வேன்.

என்னுடைய நிலைப்பாடு இதுதான்.

இந்த நூலின் இறுதியில் தேர்தல்களின் பின்னர் வடக்குகிழக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்மாவட்டத்தின் யாழ்ப்பாணத்தின் அரசியல்கோட்டையாகயிருந்த பல தொகுதிகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

தமிழ்மக்கள் இவ்வளவு வெற்றியை தருவார்கள் என தேசிய மக்கள் சக்தி கூட எதிர்பார்க்கவில்லை.

தென்னிலங்கை அரசியலின் பலவீனங்களே இதற்கு காரணம்.

ரணில்சஜித் இருவரும் இணைந்து போட்டியிட்டிருந்தால் அனுரகுமார இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பாரா என்பது சந்தேகமே.

கோட்டாபய ராஜபக்ச பெரு வெற்றிக்கு பின்னர் அடைந்த பெரும் தோல்வியும் ஊழல்கள் குறித்த பெரும் விரக்தியும் தென்னிலங்கை அரசியல் பலவீனங்களிற்கு காரணம்.

தேசிய மக்கள் சக்தியினர் தங்களை இடதுசாரிகள் என அடையாளப்படுத்த விரும்பவில்லை.

கிழக்கு மாகாணத்தில் வீட்டிற்கு வெற்றிகள் கிடைத்தது அம்பாறையில் ஒருவர் வெல்வது சாத்தியமா என்ற கேள்வி காணப்பட்ட நிலையில் அம்பாறையிலும் திருகோணமலையிலும் ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்ற முடிந்தது.

வடமாகணத்தில் தேசிய மக்கள் சக்தயின் வெற்றி குறித்து இப்படி கூறலாம்.

வடமாகாணத்தில் வீடுகளில் பெண்கள் காதல் வயப்படுவார்கள், அவ்வாறு நடந்தால் அந்த வீடு பிரச்சினைக்குரிய வீடு அங்கு பிரச்சினை உள்ளது என தெரிவிப்பார்கள்.

பெற்றோர்கள் மத்தியில் பிரச்சினை இருந்தால் வேறு ஒருவர் வரும்போது அந்த பெண் காதல்வயப்படுவார்.

அந்த நிலைதான் வடமாகாணத்திற்கு ஏற்பட்டது.

வடமாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறவில்லை தமிழ்தேசிய கட்சிகள் தேசியமக்கள் சக்தியை வெற்றிபெறச்செய்தன.

கட்சிகளுக்குள் பிரச்சினை,  கட்சிகளிடையே பிரச்சினை,காலவதியாகிவிட்ட அரசியல்வாதிகள் அரசியல் செய்ததும் ஒரு காரணம்,

சுயேட்;ச்சை குழுக்கள் மிக அதிகளவில் வாக்குகளை சிதறடித்தன.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தது பெரும் வெற்றி என்பதை விட அவர்கள் வெல்லவைக்கப்பட்டார்கள்.

தமிழ்தேசியம் தோற்கடிக்கப்படவில்லை  அது தோற்கவில்லை.

தமிழர் பகுதிகளில் சமஸ்டி வேண்டுமா என சர்வஜனவாக்கெடுப்பை நடத்தினால் முடிவு வேறுவிதமானதாக காணப்படும்.ஆம் என்றுதான் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.

கோட்டாபய அரசாங்கம் அமைத்த குழுவில் நான் இருந்தேன்.ஆனால் நான் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

அந்த குழுவினரின் பல பரிந்துரைகளை நான் ஏற்கவில்லை.

கோட்டாபய காலத்தில் முன்மொழியப்பட்ட புதிய அரசியல் அமைப்பில் சமஸ்டி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பௌத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நான் எதிர்த்தேன் – மதம் வேறு அரசியல் வேறு.

13வது திருத்தம் என்ற பெயர்பலகையை வைத்துக்கொண்டு எந்த அதிகாரம் இல்லாத ஒன்றை கொண்டுவரமுயன்றார்கள்.நான் உடன்படவில்லை.

சந்திரிகா குமாரதுங்க கொண்டுவந்த  அரசமைப்பு யோசனை  முன்னேற்றகரமானது என நான்  குறிப்பிடுவேன்.ஆனால் அதனை எதிர்த்த வரலாறு  ரணில்விக்கிரமசிங்கவும் ஐக்கியதேசிய கட்சிக்கும் உள்ளது.

புதிய அரசியல் அமைப்பிற்கு தமிழ்மக்கள் தமிழ் கட்சிகள் செல்லவேண்டுமா என்றால் வேண்டாம் என்றே தெரிவிப்பேன்.

தேசிய மக்கள் சக்தியினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து தெரிவித்துவந்தார்கள்.அதனை பேச்சுவதை விட்டுவிட்டார்கள்.

எங்கள் இனப்பிரச்சினைக்கு நாங்கள் எதிர்பார்க்கும் தீர்வுவரும்வரை  புதிய அரசமைப்பு முயற்சிகளை நாங்கள் ஏற்ககூடாது.

எங்கள் இனப்பிரச்சினைக்கு முன்வைக்கப்படுகின்ற எந்த தீர்வும் 13வது திருத்தத்திற்கு மேலானதாகயிருக்கவேண்டும்

இந்த அரசாங்கத்திடம் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான பலம் உள்ளது மூன்றில் இரண்டு உள்ளது சர்வஜனவாக்கெடுப்பிற்கு கூட இவர்கள் செல்லலாம்.ஆனால் அவர்கள் அதனை செய்யமாட்டார்கள்

தமிழ் கட்சிகள் என்ன செய்யவேண்டும்?

தமிழ்கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்க முடியாது, செத்தவீட்டில் அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது.

தென்னிலங்கை மக்களிற்கு 13 வது திருத்தம் குறித்து இன்னமும் அச்சம் உள்ளது அது குறித்து தமிழ் கட்சிகள் தெளிவுபடுத்தவேண்டும்.குடாநாட்டு அரசியலை மாத்திரம் செய்துகொண்டிருக்க முடியாது.

இருக்கின்ற மாகாணசபை முறைமையை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் முயலவேண்டும், இந்த அரசாங்கத்தில் இது சாத்தியமானதா  என தெரியவில்லை.

அதிகார பகிர்வு குறித்த யோசனை முன்வைக்கபடாத பட்சத்தில் புரிய அரசியல் அமைப்பிற்கு செல்வது ஆபத்தானது,

இந்த அரசாங்கம் புதிய அரமைப்பில் அதிகார பகிர்வை முன்வைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

தமிழ் அரசியல் கட்சிகள் இந்த பாதையில் சென்றுகொண்டிருந்தால் அது தமிழ்தேசிய அரசியல் தமிழ் அரசியல் செல்வாக்கு இழக்கும் நிலையை ஏற்படுத்தும்.

நாங்கள் ஒற்றுமைபடவேண்டும் வேண்டும், ஒற்றுமை இல்லாவிட்டால் வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் பலம் பெறும் நிலை ஏற்படும், தமிழ்தேசிய கட்சிகள் செல்வாக்கு இழக்கும் நிலை உருவாகும்,நாங்கள் பேரம்பேசும் சக்தியை இழக்கவேண்டிய நிலையேற்படும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply