கடன் அட்டையை திருடி நகைகளை வாங்கிய கிளிநொச்சி பெண் கைது!

You are currently viewing கடன் அட்டையை திருடி நகைகளை வாங்கிய கிளிநொச்சி பெண் கைது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் கடன் அட்டையை திருடி அதன்மூலம் தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர், அட்டையை திருடிச் சென்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 செயின் மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த பற்றுச்சீட்டு ஒன்றையும் சிறீலங்கா காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments