சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வட தமிழீழம் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் காலை 11 மணியளவில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த சிங்களக்கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டது.
அதேவேளை பல்கலைக்கழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.