கலவரங்களுக்கு எதிராக அணிதிரண்ட பிரித்தானிய மக்கள்!

You are currently viewing கலவரங்களுக்கு எதிராக அணிதிரண்ட பிரித்தானிய மக்கள்!

பிரித்தானியா முழுவதும் வன்முறை போராட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் அணி திரண்டுள்ளனர். பிரித்தானியா முழுவதும் கடந்த ஒரு வார காலமாக வன்முறை மற்றும் கலவரங்கள் வெடித்து வந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் உள்ள வன்முறை போராட்டங்களுக்கு எதிரான பொதுமக்கள் அணி திரண்டுள்ளனர்.

வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் போன்ற எதிர்ப்பு குடியேற்ற போராட்டக்காரர்கள் கூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளில் வன்முறை போராட்டங்களுக்கு எதிரான பொதுமக்கள் அதிக அளவில் கூடி அமைதியான பெரும்பகுதியை உருவாக்கினர்.

வன்முறை மற்றும் கலவரங்களைக் கட்டுப்படுத்த 100 க்கும் மேற்பட்ட இடங்களில் பொலிஸார் தயார் நிலையில் கண்காணித்து வருகின்றனர்./// ஜூலை 29ம் திகதி Southport-ல் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதில் முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர் தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவியதை தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த போராட்டங்களை அதன் விளைவாக உருவான கலவரங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கிலாந்து சாலையில் அமைதியாக கூடியுள்ளனர்.

அனைவரது கையிலும் “Refugees Welcome”, “Stop the far right” என்பது போன்ற பதாகைகள் இருந்தன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments