களுதாவளையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி!

You are currently viewing களுதாவளையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் களுதாவளையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுதாவளை பிரதான வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான மணலசேகரம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பெண் மீது மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதில் குறித்த பெண் ஸ்தலத்திலேயேஉயிரிழந்ததுடன், சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலததிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் களுதாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய ருசிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments