காசா பகுதியை அமெரிக்கா கைப்ற்றிக் கொள்ளும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும், கையகப்படுத்தும் காசா பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிபர் டிரம்ப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பிறகு பேசிய அதிபர் டிரம்ப், “அமெரிக்கா காசா பகுதியை எடுத்துக் கொண்டு, அங்கு ஒரு வேலையை செய்ய உள்ளது. நாங்கள் அதற்கு உரிமம் கொள்வோம். அங்குள்ள வெடிக்காத வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவோம். நிலப்பரப்பை சீர்ப்படுத்துவோம்.”
“இடிந்துபோன கட்டிடங்களை அகற்றுவோம். பொருளாதார வளர்ச்சியை கொண்டுவந்து, எண்ணற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவோம். அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்போம்,” என்று கூறினார்.
போரால் பாதிக்கப்பட்ட காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறி எகிப்து அல்லது ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்’
ஆனால் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவோம் என்பதை இந்த அதிகார வர்க்கங்கள் மருந்துக்கும் சொல்ல முன்வருவதில்லை நலியோரை அழித்து அதில் சுகபோகம் காணும் உலகத்தில் வாழ்கின்றோம்.
இதேவேளை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
ட்ரம்பின் ஆட்சியில் 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியது.
பின்னர், 2021 இல் ஜோ பைடன் அந்த முடிவை மாற்றியிருந்தார்.