காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞன் மானிப்பாயில் வெட்டுக்காயங்களுடன் மீட்பு!

You are currently viewing காதலியைப் பார்க்கச் சென்ற இளைஞன் மானிப்பாயில் வெட்டுக்காயங்களுடன் மீட்பு!

கிளிநொச்சி – ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை பார்க்க வந்த போது, வன்முறை கும்பல் ஒன்றினால் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த இளைஞர் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டிருந்தார்.

அவரை மீட்ட சிறீலங்கா பொலிசார் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் சிறீலங்கா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

யாழ்ப்பாணம் – மருதனார்மடத்தில் வெற்றிலை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவம் கடந்த வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 29 வயதுடைய நபரொருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த இளைஞன் வியாபாரத்தினை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கின்ற வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments