காதல் விவகாரத்தில் 18 வயதுடைய இளைஞனின் கை துண்டிப்பு!

You are currently viewing காதல் விவகாரத்தில் 18 வயதுடைய இளைஞனின் கை துண்டிப்பு!

கிளிநொச்சி -விநாயகபுரம் பகுதியில்நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற தகராற்றில் கை துண்டாடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனின் கையே துண்டாடப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

காயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments