காத்தான்குடியில் பெண்ணை துப்பாக்கியால் தாக்கி கொள்ளையடித்த நபர் கைது!

You are currently viewing காத்தான்குடியில் பெண்ணை துப்பாக்கியால் தாக்கி கொள்ளையடித்த நபர் கைது!
மட்டக்களப்பு, காத்தான்குடி  பகுதியில் பெண்ணை துப்பாக்கியால் தாக்கி  தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற நபர் 3 மணித்தியாலயங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர்  தெரிவித்தனர்.

 

புதிய காத்தான்குடி பகுதியில் வீடொன்றினுள் புகுந்த நபரொருவர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பெண்ணொருவரின் தலையில் துப்பாக்கியால் தாக்கி 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன்,  காயமடைந்த பெண்ணின்  வீட்டில்  தடவியல் சிறீலங்கா காவற்துறை பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பெண்ணின் வீட்டிலிருந்து  துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்று 3 மணித்தியாலங்களில் கொள்ளையடித்த நபர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் காத்தான்குடியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

காத்தான்குடி சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments