காஸாவில் இருந்து அப்பகுதி மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அதை உலக மக்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் முன்வைத்துள்ளாா்.
அதற்கு ஏற்ப காஸாவில் இருந்து பலஸ்தீனா்களே ‘தாமாக முன்வந்து வெளியேறுவதை’ துரிதப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய பணியகத்தை அமைக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும் காஸாவில் இருந்து வெளியேற தங்களுக்கு விருப்பமில்லை என்று பலஸ்தீனா்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்முன்னே தங்கள் மண்ணை கொள்ளையடிக்கும் அதிகார வர்க்கங்களின் இந்த கொடிய அறிவிப்பை கேட்டு நிலத்தின் பூர்வீக மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அடிமைப்படுத்தப்படும் ஒவ்வொரு இன மக்களும் அறிவார்