கிராம உத்தியோகத்தர்கள் மூன்று நாட்களாக போராட்டம்!

You are currently viewing கிராம உத்தியோகத்தர்கள் மூன்று நாட்களாக போராட்டம்!

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் புதன்கிழமை ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, மூன்று நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து, எரிபொருள், சீருடை மற்றும் தொடர்பாடல் ஆகிய கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் பல ஆண்டுகளாக எங்கள் கூட்டணி கலந்துரையாடி வருகிறது, ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்து தாமதமாகின்றன என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கிராம உத்தியோகத்தர்கள் மூன்று நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, வார இறுதி நாட்கள் மற்றும் விசேட அரச விடுமுறை நாட்களில் வேலை செய்ய போவதில்லை. எங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்காவிட்டால், மாவட்ட அளவில் போராட்டம் தொடரும் என கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments