கிளிநொச்சியில் 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் இருவர் கைது!

You are currently viewing கிளிநொச்சியில் 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் இருவர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக  ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன்  மூன்று  பேரை நேற்று  (13) வியாழக்கிழமை இரவு சிறீலங்கா காற்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன சிறீலங்கா காற்துறையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் உந்துருளியில் பயணித்த இருவரைக் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து சிறீலங்கா காற்துறையினர் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அமெரிக்க டொலரை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments