கொக்குவிலில் கடலில் குளித்த மாணவர்கள் இருவர் சடலங்களாக மீட்பு!

You are currently viewing கொக்குவிலில் கடலில் குளித்த மாணவர்கள் இருவர் சடலங்களாக மீட்பு!

மட்டக்களப்பு- கொக்குவில் சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் இருவரும், வகுப்புக்கு செல்வதாக நேற்று முன்நாள் மாலை கூறிச்சென்ற நிலையில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இருந்து இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் 16 வயதுடைய மாணவர்கள் என கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கறுவேப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (வயது 16), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன்த் (வயது16) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.யூ.அப்துல் ஹக்கீம் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு மரண விசாரணையினை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொக்குவில் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments