கொடிகாமத்தில் 25 டிப்பர்கள் சிறீலங்கா காவற்துறையால் சுற்றிவளைப்பு!

You are currently viewing கொடிகாமத்தில் 25 டிப்பர்கள் சிறீலங்கா காவற்துறையால் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் சாவச்சேரி பகுதியில் நடாத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 டிப்பர்கள் சிறீலங்கா காவற்துறையால் கைப்பற்றப்பட்டது.

அனுமதிப் பத்திரங்களின்றி மணலுடன் 24 டிப்பரும் அனுமதியின்றி மரக்குற்றிகளுடன் ஒரு டிப்பரும் என 25 டிப்பர்கள் கொடிகாமம், சாவகச்சேரி சிறீலங்கா காவற்துறையால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் பணிப்புரைக்கமைய சுற்றிவளைப்பு கடந்த புதன்கிழமை (28) நடத்தப்பட்டது.

கைப்பற்றப்பட்ட டிப்பர்களையும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் முற்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க சிறீலங்கா காவற்துறையார் தயாராகியுள்ளனர்.

தொடர்ச்சியாக அனுமதியின்றி டிப்பரில் மண் அகழும் செயற்பாடு நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments