கொரோனா தொற்று 21 கோடியை கடந்தது; உலகில் 44 இலட்சத்துக்கு அதிகமானோர் பலி!

You are currently viewing கொரோனா தொற்று 21 கோடியை கடந்தது; உலகில் 44 இலட்சத்துக்கு அதிகமானோர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்து அதிகரித்துள்ளது.

இன்று காலை வரையான தரவுகளின் பிரகாரம் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 44 இலட்சத்து 4 ஆயிரத்தைக் கடந்து உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 18 கோடியே 81 இலட்சத்து 87 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். 1 கோடியே 74 லட்சத்து 64 ஆயிரத்து 427 பேர் தொற்று நோயுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவா்களில் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் சற்று அதிகமானவர்கள் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர்.

உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 98 வீதம் பேர் குணமடைந்துள்ளனர். 2 வீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி பயனளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தபோதும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் மீண்டும் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், அதிகளவு தடுப்பூசிகளைப் போட்டக்கொண்ட நாடுகளிலும் மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது.

எனினும் தடுப்பூசியால் பாதிப்புக்கள் குறைவதுடன், மரண வீதங்களும் குறைவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments