கோப்பாயில் இளம் குடும்பத் தலைவர் வெட்டிக்கொலை! – முகமூடி நபர்கள் வெறிச்செயல்!

You are currently viewing கோப்பாயில் இளம் குடும்பத் தலைவர் வெட்டிக்கொலை! – முகமூடி நபர்கள் வெறிச்செயல்!

கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் இராசபாதை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தக உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் காவல்துறையினர் கூறினர்.

கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் (வயது 30) என்பவரே கொல்லப்பட்டார்.

முகமூடியணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பித்தனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply