சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி உட்பட்ட தமிழர்களிற்கு நினைவேந்தல்!

You are currently viewing சிங்கள பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி உட்பட்ட தமிழர்களிற்கு நினைவேந்தல்!

யாழ்.செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நேற்றையநாள்(07) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் நேற்றையநாள் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குகொண்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments