சுகயீன போராட்டம் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

You are currently viewing சுகயீன போராட்டம் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன போராட்டத்தில் சகல ஆசிரியர்களையும் ஒன்றிணையுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன். உதயரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் நேற்று (06.07.2024) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை அவர் முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எமது சம்பள நிலுவையை பெறுவதற்கான போராட்டத்தினை கடந்த 12ஆம் திகதி பாடசாலை முடிவடைந்ததன் பின்னர நாம் ஆரம்பித்தோம்.

இந்த போராட்டம் இலங்கையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைகளிள் உள்ள ஆசிரியர்களால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதோடு மீண்டும் 26ஆம் திகதி கொழும்பு மற்றும் ஏனைய வலயங்களிலும் இதனை ஆரம்பித்திருந்தோம்.

இந்நிலையில், ஆசிரியர்கள் அதிபர்கள் கூட்டமைப்பு எதிர்வரும் 09ஆம் திகதி மீண்டும் ஓர் சுகயீன போராட்டத்தினை ஆரம்பிக்க இருக்கின்றோம்.

இதேவேளை

அரச ஊழியர்களுக்கு  இந்த ஆண்டு மீண்டும்  சம்பள உயர்வை வழங்க முடியாதுள்ளது. அவ்வாறு சம்பள உயர்வு வழங்கினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments