இரண்டாவது செம்மணிப் புதைகுழியில் அதிகாரிகள் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அகழ்வாராய்ச்சி செயல்முறை தொடர்புடைய சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும் உண்மை மற்றும் நீதியை வழங்குவதற்கான ஒரு முக்கியமான படியாக இது இருக்கலாம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அதிகாரிகளை பின்வருவனவற்றை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
1) அகழ்வாராய்ச்சி செயல்முறையை முடிக்க போதுமான நிதி மற்றும் வளங்கள் ஒதுக்கப்படவேண்டும்
2) அகழ்வாராய்ச்சியைச் சுற்றியுள்ள செயல்முறை வெளிப்படையானது, சந்தேகத்திற்குரிய பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு போதுமான அணுகலை வழங்கவேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயல்முறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் இடைக்கால கண்டுபிடிப்புகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.
3) தளம் பாதுகாக்கப்படுவது உட்பட தளத்தின் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.