ஜேர்மனியில் வாழும் தாயக உறவுகளின் பேராதரவுடன் பொங்கும் மகிழ்வு 2025

You are currently viewing ஜேர்மனியில் வாழும் தாயக உறவுகளின் பேராதரவுடன்  பொங்கும் மகிழ்வு 2025

தாயகத்தில் வாழுகின்ற எட்டு மாவட்டங்களைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 22 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு 31.05.2025 அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் மதியம் 1.00 மணிக்கு மாணவர்களை அழைக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டு பி.ப 2.00 மணிக்கு வவுனியா மாவட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் திரு தவபாலன் தலைமையில் மங்கலவிளக்கு ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

இதில் மங்கலவிளக்கினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து முன்னணியின் செயலாளர் திரு செல்வராசா கஜேந்திரன் மற்றும் வவுனியா பல்கலைக்களக தொழில் வழிகாட்டல் ஆலோசகர் திரு சசிதரன்
ஓய்வுநிலை அதிபர் திருமதி கமலாம்பிகை பெற்றோர் சார்பாக ஒருவரும் 8 மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் என மங்களவிளக்கு ஏற்றப்பட்டதை தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் வரவேற்புரையினை வவுனியா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவனேஸ்வரி நிகழ்தினார்.

திரு தவபாலனின் தலைமையுரையை தொடர்ந்து ஆசியுரையினை ஓய்வுநிலை அதிபர் திருமதி கமலாம்பிகை நிகழ்த்த சிறப்புரைகளை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறும்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் திரு செல்வராஜா கஜேந்திரன் நிகழ்த தகைமை உரையினை வவுனியா பல்கலைக்கழக தொழில்சார் வழிகாட்டல் ஆலோசகர் திரு சசிதரன் நிகழ்த்தியதை தொடர்ந்து மாணவர்களுக்கான மடிக்கணினியினை விருந்தினர்களால் வழங்கிவைக்க, இவ் நிகழ்வில் புலம்பெயர்ந்த மாணவர்களை புலத்தில் உள்ள மாணவர்களேடு ஒழுங்கமைத்த யேர்மனியின் தமிழ்க் கல்விக் கழகத் துணைப்பொறுப்பாளர் திரு சேரன் அவர்கள் சூம் செயலிஊடாக உரைநிகழ்த்தினார்.  ஏற்புரையினை களனி பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி றூ.றொவேக்கா மற்றும் யாழ் பல்கலைகழக மாணவன் கி.காங்கேயன் நிகழ்த்தியதை தொடர்ந்து நன்றியுரையினை நிகழ்வு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ம.பிறேம் நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களின் போக்குவரவுக்கான பணம் வழங்கப்பட்டு கணினிகள் சரிபார்க்கப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply