ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள்!!

You are currently viewing ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள்!!

தாங்கள் இனவாதம் இல்லை என்றும் இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை என செல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜேவிபியினர் தான் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம்  கொக்குவிலில் பகுதியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்..

தெற்கில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கிலும் தாங்கள் தான் பெரிய கட்சி என்றும் தமக்கே தமிழ் மக்களும் ஆணை வழங்கி உள்ளதாகவும் ஜேவிபியினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.

உண்மையில் வடகிழக்கிலுள்ள 19 பாராளுமன்ற உறுப்பினர்களில் 8 பேரே ஜேவிபியினர். ஏனையவர்களில் தமிழரசுக் கட்சி 8 பேர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 1 சுயேட்சைகுழு 1 என்றவாறாக ஆசனங்கள் உள்ளன.

இவ்வாறிருக்கையில் எதனடிப்படையில் தாம் தான் பெரிய கட்சி என்றும் தமக்கே மக்கள் ஆணை வழங்கி உள்ளதாகவும் ஜேவிபியினர் கூறுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.

இதனை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் கூட தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த பொய்ப் பிரச்சாரத்தையும் ஜேவிபியின் ஏமாற்று தனங்களையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய நிலைப்பாடோடு அவர்கள் இப்போது இல்லை எனவும் கூறி வருகின்றனர். அவர்களுக்கு சமஷ்டியோ சுயாட்சியோ அவசியமில்லை என்றும் அவர்களை சமத்துவமாக கருதினால் இலங்கையர் என்ற அடையாளத்துடன் அவர்கள் வாழ்வார்கள் என்றவாறாக பேசி வருகின்றனர்.

அதேபோன்ற கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகள் ஊழல் நிறைந்த இனவாத்த்துடன் செயற்பட்டதாலே தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியவில்லை. ஆனால் நாம் ஊழல், இனவாதம்  இல்லாத ஒரு கட்சியாகவே செயற்பட்டு  வருவதால் எமக்கு தமிழ் மக்களும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இப்படி இனமத பாகுபாடு பார்க்காதவர்கள் என்றால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை இன்னமும் ஏன் நிறைவேற்றவில்லை. தாம் வழங்கிய வாககுறுதிகளை தாமே நிறைவேற்ற தெரியாதவர்கள

உண்மையில் இனமத வேறுபாட பார்க்காதவர்கள் என்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிதியைக் கொடுப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது. அரசாங்கம் என்றவுடன் மக்களை அச்சுறுத்தி மிரட்டல் விடுவதா இவர்களது அரசியல் மாற்றம் என கேட்கிறோம்.

என்பிபி என்று சொல்லுகிற ஜேவிபியின் கதைகள் பேச்சுக்கள் செயற்பாடுகள் எல்லலாமே முழுப்பூசணிக்காயை சோறுக்குள்  புதைப்பது போன்ற ஏமாற்று வித்தைகள் தான்.

தாங்கள் இனவாதம் இல்லை என்றும் இனவாதம் பேசுவதற்கு இடமில்லை எனவும் கூறுகின்ற இந்த ஜேவிபியினர் தான் முற்று முழுதான இனவாதிகள். இவர்கள் பெயரளவிலே இனவாதமில்லை என செல்லிக்கொண்டு இருந்தாலும் எல்லாவற்றிலும் இனவாதம் கொண்டவர்கள் இந்த ஜேவிபியினர் தான்.

சின்ன சின்ன விடயங்களுக்கு கூட தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் தான் இனவாதத்தை தூண்டுவதாக சொல்லும் இவர்கள் தமிழ் மக்களது பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஏன் தீர்வை வழங்க முடியாது இருக்கின்றனர்.

ஒரு பக்கம் நீங்கள் தான் பெரிய கட்சி என்றால் தையிட்டி விகாரை போன்ற இனவாதமில்லாத சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு இனவாதம் இல்லாமல் தீரவை வழங்கலாமே.ஏன் தீர்வு காண  முடியவில்லலை. ஆகவே உங்களிடம் இனவாதம் இல்லை என்றால் முதலில் தையிட்டி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்க நீங்க தயாரா என சவால் விடுக்கிறோம்.

ஆக மொத்தத்தில் தமிழ் மக்களின். ஒவ்வொரு பிரச்சனைக்களையும் தீர்க்க முடியவில்லை என்பதால் இந்தப் பிரச்சனைகளைத் தட்டிக் கழித்து இனவாதம் என்று பெயரைச் சூட்டிக்கொண்டு தட்டிக் கழித்துவிட்டு கடந்து செல்ல பார்க்கின்றனர்.

உண்மையில் இனவாதம் என்றால் சட்டவிரோத நடவடிக்கைக்கு நடவடிக்கை எடுக்காமல் அதனை முடக்குவது தான் இனவாதம். இவ்வாறாக தமிழ் மக்களின் ஒவ்வொரு விடயத்திற்கும் குறிப்பாக தாமே வழங்கிய வாக்குறுதிகள் உட்பட அனைத்தையும் தட்டிக்கழித்து கடந்து செல்லவே முயற்சிக்கின்றனர்.

இனவாதம் இல்லை இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜேவிபியினரே வெளிப்படுத்துகின்றனர் அவர்களே உண்மையான இனவாதிகள்.

இத்தகைய பௌத்த சிங்கள பேரினவாதிகளுக்கு இத்தேர்தலில் சந்தர்ப்பத்தை வழங்கினால் அது தமிழ் மக்களுக்கே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்புடன் இருநது

தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற எங்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

குறிப்பாக முன்னாள் ஐனாதிபதி கொடுரமானவர் இனவாதி என்பதெல்லாம் தமிழ் மக்களுக்கு தெரிந்திருந்தாலும் அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு சிங்கள மக்களுக்கே இரண்டு வருடங்கள் எடுத்திருந்தன.

ஆனால் பல்வேறு கதைகளைக் கூறி ஆட்சிக்கு வந்த இன்றைய ஐனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தான் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாதவராக தன்னுடையதும் தமது கட்சியினதும் உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகின்றார். ஆக அனுரவைப் பற்றி ஆறு மாதத்தில் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply