ஜோசப்பின் கைதுக்கு எதிராக ஐ.நாவிடம் மகஜர் கையளிப்பு!

You are currently viewing ஜோசப்பின் கைதுக்கு எதிராக ஐ.நாவிடம் மகஜர் கையளிப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் ஆசிரியர் சங்கம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது.

கொழும்பில் ஆசிரியர் சங்கம் சார்பில் மேற்கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின்போது ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொலிஸார் முல்லைத்தீவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதனைக் கண்டித்தே இலங்கை ஆசிரிய சங்கத் தலைவர் உள்ளிட்டவர்களால் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

மகஜரை நேரில் கையளிப்பதற்காக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, உப தலைவர் எம்.எம்.சமீன் மற்றும் மத்திய குழு உறுப்பினர் எம்.எம்.எம். லுத்பி உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments