ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சியை அடுத்து எலான் மஸ்க் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

You are currently viewing ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சியை அடுத்து எலான் மஸ்க் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது எக்ஸ் தளத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் கடந்த எட்டு மாதங்களில், தன்னைக் கொல்ல இரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெக்சாஸில் உள்ள டெஸ்லாவின் தலைமையகம் அருகே சிலர் துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாக அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியை அடுத்து, தனது பாதுகாப்பு குறித்து எலான் மஸ்க் கவலை தெரிவிக்கும் முகமாகவே இந்த பதிவினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments