மரத்தில் ஏறிய இருவர் தவறி விழுந்து பலி!

You are currently viewing மரத்தில் ஏறிய இருவர் தவறி விழுந்து பலி!

மட்டக்களப்பில் தந்தையின் தாகம் தீர்க்க தென்னை மரத்தில் ஏறிய 21வயதுடைய இளைஞன் தவறி விழுந்து பலியான சம்பவமொன்று ஞாயிற்றுகிழமை மாலை (11) இடம்பெற்றுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது தந்தைக்கு உடற்சோர்வுடன் களைப்பும் ஏற்பட்டதால் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக மகன் ஏறியுள்ளார்.

மரத்தில் ஏறிய மகன் தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்து உணர்விழந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை

யாழ்ப்பாணத்தில் மாங்காய் பறிப்பதற்கு முயன்றவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் பண்டத்தரிப்பு, பிரான்பற்றைச் சேர்ந்த வன்னியசிங்கம் ரவீந்திரன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்திக்கு அண்மையாகவுள்ள கட்டடத்துக்கு அருகில் வீதிக்கரையில் இவர் பயணித்த லொறி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

லொறியில் ஒரு காலும் மதிலில் ஒரு காலும் வைத்து ஏறி மாங்காய் பிடுங்குவதற்கு அவர் முயன்றபோது, எதிர்பாராதவிதமாகத் தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments