தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் – பன்னிரெண்டாம் நாள்!

You are currently viewing தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் – பன்னிரெண்டாம் நாள்!

#உருகும்மெழுகுவர்த்தி

#12ம்நாள்

இருநூற்றி அறுபத்தியந்து

மணத்தியாலயங்கள்

சாகும்வரை நீராகாரமின்றி

அறப்போர் தொடுத்த

அகிம்சையின் சக்கரவர்த்தி

புனித இலட்சியமாம்

தமிழீழம் என்ற

இறுதி இலக்கிற்காய்

தன் மூச்சை நிறுத்திக்கொண்டான்!

தன் கோரிக்கைகள்

நிறைவேறும் வரை

யாரும் போராட்டத்தினை

இடை நிறுத்தக்கூடாதென

சத்தியம் வாங்கியவன்

வித்துடலாகி

சந்ததிகளின் வழிகாட்டியாய்

வரலாறாகிப்போனான்!

ஏந்திய ஆயுதமே

எங்கள் உரிமைக்கான

திறவுகோல் என்பதை

தன் மரணத்தினால்

திலீபன்

எழுதிவிட்டுப் போனான்!

மனிதம் இறந்துபோன

அவனியில்

அறத்தின் வழியில்

உரிமைக்காய் பேசும்

மொழியில்

உயிர் இல்லை

என்பதை

உலகத்திற்கு

உணர்த்திவிட்டு

எங்கள்

அறத்தின் பிள்ளை

அகன்றுபோனான்!

ஓவென்று

கதறும்

உறவுகளும்

மக்களும்

போராளிகளும்

மரணத்தை வென்ற

மாவீரனுக்கு

மலர்களால்

வணக்கம் செலுத்தத்

தொடங்கினர்!

விழிகளில் முட்டிய

நீரும்

மொழியால் உரசும்

இசையும்

ஊரேழு மைந்தனின்

தியாகத்தினை

அணைத்தபடி

மண்ணை நனைத்தது!

ஆயுதங்களை

வாங்கிய பாரதம்

பாதுகாப்பை

பொறுப்பேற்ற நேருவின் பேரன்

நேர்மையற்றுப்

போனதால்

ஊரெழுமைந்தன்

உயிர் பிரிந்துபோனான்!

எங்கள்

நெஞ்சமெல்லாம்

விடுதலைத்தீயை

விதைத்துவிட்டுப்

சரித்திரமாகிவிட்டான்!

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments