தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் – இரண்டாம் நாள்.!

You are currently viewing தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் – இரண்டாம் நாள்.!

#உருகும்மெழுகுவர்த்தி

#2ம்நாள்

ஒரு பூவின்

புன்னகையாய்

அழகாய் பூக்கும்

அவனது இதழ்கள்

இரண்டாம் நாளினை

நீராகாரமின்றி

அரவணைக்கிறது!

உறுதி குலையாத வீரனின்

உருகும் உடலை பார்க்க

உணர்வால்

கொத்துக்கொத்தாய்

குவிந்தனர்

இளையோர்!

ஒரு

வரலாறு மையம்கொண்ட

அரங்கிலே

அவனுக்காய்

பாக்களை காணிக்கையாக்குவதற்காய்

பெயர்களை

பதிவுசெய்தனர்!

மக்களோடு

பேசவேண்டுமென துடித்த

உதடுகள்

ஒலிவாங்கியில்

ஓர்மமாய்

உரிமைக்காய்

ஓங்கி ஒலித்தது!

நாம்

உறுதியோடு

இலட்சியத்தில்

இருக்கின்றோம்

என்னோடு இருந்து

இறுதியாக

விடைபெற்ற

மில்லர் சொன்ன

வார்த்தைகள்

என் நினைவுச்சுவரை தட்டுகிறது

அது

நான் மக்களுக்காக

மகிழ்ச்சியாக

போகிறேன்

ஆனால்

விடுதலைபெறுவதை

கண்ணால்

காணமுடியாது

அதுதான்

ஏக்கமாகிறது

என்றான்

இப்படித்தான்

650 மாவீரர்களும்

மடிந்தார்கள்!

நானும்

அப்படித்தான்

தேசியத்தலைவரிடம்

விடைபெற்றபோது

ஒன்றைச்சொன்னார்!

நீ முன்னால் போ

நான் பின்னால்

வருகிறேனென்று

உயிருக்கு அஞ்சாத

உன்னதமான

தலைவனின் வழியில்

நிச்சயமாக

விடுதலையடைவோம்!

அதை வானத்திலிருந்து 650 மாவீரர்களோடு சேர்ந்து

நானும் பார்த்து மகிழ்வேன்

தலைவரோடு

சேர்ந்து

போராடுங்கள்

நான் போய்வருகிறேனென

சத்தியத்திற்காய்

சாகத்துணிந்த

தியாகச்செம்மலின் வார்தைகள்

எல்லோர்

இருதயங்களையும்

கண்ணாடியாய்

நொருக்கியது!

நின்றுபேசமுடியாது

இருந்துபேசியபோது

நாளை சுயநினைவோடு

இருப்பேனோ

தெரியாது

என்ற வார்த்தைகளும்

அருகிலிருந்த

அனைவரையும்

சிதைத்து சின்னாபின்னமாக்கியது!

ஆனாலும்

வயிற்றிலே

தீராத தாகத்தை சுமந்த

ஊரேழு மைந்தனின்

நெஞ்சிலே

விடுதலைத்தீ

சுவாலையாய்

எரிந்தது!

இன்றுதான்

ஆண்தாயும்

தன் பிள்ளையை

பார்த்து

தலைகோதி

வகிடெடுத்து

உச்சிமோர்ந்து

சென்றது!!

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments