தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் – 5ம் நாள்

You are currently viewing தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் – 5ம் நாள்

அதிகாலை எழுந்ததும்

அனைத்து

பத்திரிகைச் செய்திகளையும்

தவறாது படிக்கும்

பார்த்தீபன்

பாரதத்தின்

சதியால்

துவண்டுபோனான்!

எழும்ப முடியாது

போர்வைக்குள்

புதைந்துபோனான்!

மெல்ல மெல்ல

கொல்லும்

விசமாய்

நீராகாரமின்றிய

உடல்

பசித்தீயில் கருகி

உயிரை

எரிக்கத் தொடங்கிவிட்டது!

சாரை சாரையாய்

மக்கள் வெள்ளம்

பேரூந்துகளை

நிரப்பியபடி

பார்த்தீபனின்

பக்கத்தில் வந்தனர்!

இனத்திற்காக

மருத்துவப்படிப்பை துறந்து

அறத்திற்காய்

அணைந்து கொண்டிருக்கும்

விளக்காய்

விழிப்படலத்தின் முன்னே

உருகிக்கொண்டிருக்கிறான்

எங்கள்

ஊரேழு மைந்தன்!

இன்றுதான்

இந்திப்படை

அதிகாரி

திலீபனைப்

அருகில்வந்து

பார்த்துவிட்டு

வழமைபோன்று

நடவடிக்கை

எடுப்பதாக

கூறிவிட்டு

அகன்றுவிட்டார்!

ஆனாலும்

ஐந்தாம் நாளும்

திலீபதீபம்

எரிந்துகொண்டே

இருக்கிறது!

உலகிற்கு நீதியை

பறைசாற்றியபடி

கறைபடியா அறப்போர்

தணியாத தாகத்தோடும்

அடங்காப் பசியோடும்

தொடர்கிறது…

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments